விளையாட்டு

தோக்கியோ2020: தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் விளையாட்டாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் வசதிகள் மேம்படுத்தப்படும்

31/07/2021 07:41 PM

தோக்கியோ, 31 ஜூலை (பெர்னாமா) -- தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் விளையாட்டாளர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் வசதிகள் மேம்படுத்தப்படும் என்று தோக்கியோ ஒலிம்பிக் ஏற்பாட்டுக் குழு அறிவித்திருக்கிறது.

உணவு, பயிற்சி உட்பட அடிப்படைத் தேவைகளுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதாகத் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் விளையாட்டாளர்கள் குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து, ஒலிம்பிக் ஏற்பாட்டுக் குழு இவ்வாறு தெரிவித்திருக்கிறது.

தனிமைப்படுத்துதலுக்கு  சில கட்டுப்பாடுகளை ஜப்பானிய சுகாதார அதிகாரிகள் விதித்திருப்பதால், இது குறித்து தீவிரமாக ஆலோசிக்கப்படும் என்றும் அக்குழு கூறியிருக்கிறது.

கொவிட்-19 நோயினால் பாதிக்கப்பட்ட  விளையாட்டாளர்கள் மற்றும் ஊழியர்கள் அவர்களின் குழுவிடம் இருந்து பிரிக்கப்பட்டு மாற்று இடத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றனர்.  

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: 1130 (ஆஸ்ட்ரோ 502)