மெட்சு, 23 செப்டம்பர் (பெர்னாமா) -- மொசெல் பொது டென்னிஸ் போட்டியின் காலிறுதி சுற்றுக்கு ஏண்டி முரேய் தேர்வாகியிருக்கின்றார்.
கனடாவின் வாசக் போஸ்பிஸில் உடன் நடைபெற்ற ஆட்டத்தை ஒரு மணி நேரம் 24 நிமிடங்கள் வரை விளையாடி, உலகின் முதல் நிலை விளையாட்டாளரான ஏண்டி முரேய் வெற்றி பெற்றார்.
பிரான்ஸ், மெட்சுவில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 6-3, 6-3 என்ற நேரடி செட்களில் ஏண்டி முரேய் எளிமையாக வெற்றிப் பெற்றார்.
இதற்கு முன்பதாக, வாசக் போஸ்பிஸில் உடன் நடைபெற்ற ஆறு ஆட்டங்களில், ஏண்டி முரேய் ஐந்து முறை வெற்றிப் பெற்றிருக்கின்றார்.
காலிறுதி ஆட்டத்தில், போலந்தின் ஹூபர்ட் ஹர்காஸ் அல்லது உபசரணை நாட்டின் விளையாட்டாளரான
லூகாஸ் பவுலியை ஏண்டி முரேய் சந்திக்கவுள்ளார்.
--பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: 1130 (ஆஸ்ட்ரோ 502)
© 2024 BERNAMA • உரிமைத் துறப்பு • தனியுரிமைக் கொள்கை • பாதுகாப்பு கொள்கை