BREAKING NEWS | Former inspector general of police (IGP) Tun Mohammed Hanif Omar died at 2.15 am today - Son | Bekas Ketua Polis Negara (KPN) Tun Mohammed Hanif Omar meninggal dunia pada 2.15 pagi tadi - Anak | |
கோலாலம்பூர், 23 செப்டம்பர் (பெர்னாமா) -- கொவிட்-19 பெருந்தொற்றை கையாளும் முயற்சியில் குறைந்தது 80 விழுக்காட்டு பெரியவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் அடிப்படையில், சமூக நோய் எதிர்ப்பு சக்தியை மதிப்பிடும் பொதுவான வழிமுறையை சுகாதார அமைச்சு பயன்படுத்தாது.
அவ்வழிமுறையின் பயன்பாட்டை உலக சுகாதார நிபுணர்களும் நிறுத்திவிட்டதாக, சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் தெரிவித்திருக்கிறார்.
அதோடு, டெல்டா உருமாறிய தொற்று பரவலினால், இதற்கு முன்னர் நிர்ணயிக்கப்பட்ட 80 விழுக்காட்டு பெரியவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் இலக்கைக் காட்டிலும், இன்னும் அதிகமான மக்களுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டியிருப்பதாக அவர் தெளிவுப்படுத்தியிருக்கிறார்.
நாட்டில் 80 விழுக்காட்டிற்கும் அதிகமான பெரியவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்ட போதிலும், கொவிட்-19 சம்பவங்களும் மரணங்களும் அதிகரிப்பது தொடர்பில் பொந்தியான் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஶ்ரீ அஹமாட் மஸ்லான் எழுப்பிய கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.
நோய்ப் பரவலைக் கட்டுபடுத்துவதற்காக, இவ்வாண்டு பிப்ரவரி 24 ஆம் தேதி தொடங்கப்பட்ட தேசிய கொவிட்-19 தடுப்பூசி திட்டத்தின் கீழ் கடந்த செவ்வாய்கிழமை வரையில் 80 விழுக்காட்டு பெரியவர்களுக்கு இரண்டு தடுப்பூசியும் செலுத்தப்பட்டது.
திட்டமிடப்பட்டதைக் காட்டிலும் விரைவாக அரசாங்கத்தின் இலக்கு அடையப்பட்டிருக்கிறது.
--பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: 1130
© 2024 BERNAMA • உரிமைத் துறப்பு • தனியுரிமைக் கொள்கை • பாதுகாப்பு கொள்கை