விளையாட்டு

க்ரேம்லின் கிண்ண டென்னிஸ் போட்டி: ஆண்ட்ரி ரூப்லெவ் அதிர்ச்சி தோல்வி

22/10/2021 07:42 PM

மாஸ்கோ, 22 அக்டோபர் (பெர்னாமா) -- க்ரேம்லின் கிண்ண டென்னிஸ் போட்டியின் நடப்பு வெற்றியாளரான ரஷ்யாவின் ஆண்ட்ரி ரூப்லெவ் தமது வெற்றியைத் தற்காத்துக் கொள்ள தவறி இருக்கின்றார்.

தகுதி சுற்று ஆட்டத்தில், அவர் பிரான்ஸ்சின் அட்ரியன் மன்னா ரினோவிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்து, காலிறுதிக்குச் செல்லும் வாய்ப்பை நழுவ விட்டிருக்கின்றார்.

உலகின் ஆறாம் நிலை ஆட்டக்காரரான ஆண்ட்ரி ரூப்லெவ், தர வரிசையில் 51-வது இடத்தில் இருக்கும் அட்ரியன் மன்னாரினோவிடம் தோல்வி காண்டிருப்பது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்திருக்கிறது..

முதல் செட்டில், 7-5 என்ற புள்ளியில் ரூப்லெவ் முன்னிலை வகித்தார்.

எனினும், இரண்டாம் மற்றும் செட்டில் திறமையான ஆட்டத்திறனை வெளிப்படுத்திய மன்னாரினோவிடம் 6-7, 6-3 என்ற புள்ளிகளில் ரூப்லெவ் தோல்வியைத் தழுவினார்.

காலிறுதிக்குத் தகுதிப் பெற்றிருக்கும் 33 வயதுடைய மன்னாரினோ, அடுத்த சுற்றில் லித்வானியாவின் ரிச்சர்ட்ஸ் பேரங்கிசைச் சந்திப்பார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: 1130 (ஆஸ்ட்ரோ 502)