வங்காளதேசம், 23 அக்டோபர் (பெர்னாமா) -- காக்ஸ் பஜாரில் உள்ள ரோஹிங்யா அகதிகள் முகாமில் துப்பாக்கி தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.
அங்கே உள்ள சமயப் பள்ளி ஒன்றில் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாகவும் அத்தாக்குதலில் இதுவரை எழுவர் பலியாகியிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
நால்வர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த வேளையில் மூவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
மேலும் பலர் காயமடைந்திருக்கின்றனர்.
இந்தத் தாக்குதலை மர்ம நபர்கள் நடத்தியதாக கூறப்படுகிறது.
துப்பாக்கி வைத்திருந்த ரோஹிங்யா ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
மூன்று வாரத்துக்கு முன்பு,ரோஹிங்யா சமூகத் தலைவர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டதைத் தொடர்ந்து சுமார் ஒன்பது லட்சம் பேர் வசிக்கும் அந்த முகாமில் பதற்றம் அதிகரித்துள்ளது.
-- பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: 1130 (ஆஸ்ட்ரோ 502)]
© 2024 BERNAMA • உரிமைத் துறப்பு • தனியுரிமைக் கொள்கை • பாதுகாப்பு கொள்கை