BREAKING NEWS   Helicopter crash tragedy affects families of Malaysian Armed Forces, a big loss to the nation - PM Anwar | RMN helicopter crash: PM Anwar expresses condolences, prays the victims' families be given strength in time of tragedy | Tragedi helikopter terhempas beri kesan kepada keluarga Angkatan Tentera Malaysia, kehilangan besar buat negara - PM Anwar | Agong saddened by RMN helicopter crash in Lumut, sends his condolences to victims' families | Tragedi helikopter terhempas beri kesan kepada keluarga Angkatan Tentera Malaysia, kehilangan besar buat negara - PM Anwar | 
சிறப்புச் செய்தி

நன்மைகளும் தீமைகளும் நிறைந்தது தேநீர்

21/05/2022 07:37 PM

கோலாலம்பூர், 21 மே (பெர்னாமா) -- தேநீரில் உள்ள தாதுப் பொருட்களே உடலுக்கு பயன் அளிப்பதாகவும் அதனைப் குடிப்பதனால் ஏற்படும் நன்மைகளையும் சுகாதார அமைச்சைச் சேர்ந்த உணவியல் நிபுணர் மகேஸ்வரி லட்சமணன் இவ்வாறு விளக்கமளிக்கின்றார்.

''மனரீதியில் தங்களை நிலையாக வைத்திருப்பதற்கு இந்தத் தேநீர் உதவியாக இருக்கின்றது. தேநீதி குடிப்பதனால் உடலில் ஏற்பட்டிருக்கும் சில காயங்களும் குணமடைகின்றன,'' என்றார் மகேஸ்வரி.

காப்பியை விட தேநீரில் CAFFEINE (காஃபின்) குறைவாகவே உள்ளது.

தேநீரில் நோய் எதிர்ப்பு சக்தி அடங்கியிருப்பதாக கூறிய மகேஸ்வரி, அதனை அளவிற்கு மீறி அருந்தினால் உடலுக்கு தீங்கை விளைவிக்கும் என்றும் தெரிவித்தார்.

இருப்பினும் மக்கள் அருந்தும் தேநீர் வகையை பொருத்தே பாதிப்புகளும் மாறுபடுவதாக  அவர் சுட்டிக் காட்டினார்.

''தற்போது தேநீர் மேல் நாட்டு ரீதியாகவும் தயாரிக்கப்படுகின்றன. சில நேரங்களில் அவற்றில் சேர்க்கப்படும் கூடுதலான தூள் மற்றும் சீனிகள் உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன,'' என்றார் அவர்.

எனவே, தினசரி தேநீர் அருந்தும் பழக்கம் கொண்டவர்கள் அதனை அளவாக அருந்தி உடலுக்கு பாதிப்பு ஏற்படாமல் கவனமாக இருக்க வேண்டும் என்று மகேஸ்வரி கேட்டுக் கொண்டார்.

--  பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: 1130 (ஆஸ்ட்ரோ 502)