பெட்டாலிங் ஜெயா, 27 மே (பெர்னாமா) -- நம்பிக்கைக் கூட்டணியில் இணைவது குறித்து இதுவரை எந்தவோர் அரசியல் கட்சியும் முன்வரவில்லை.
கெஅடிலான், ஜசெக, அமானா மற்றும் UPKO ஆகிய நான்கு முதன்மை கட்சிகளே இன்னும் தொடர்ந்து நம்பிக்கைக் கூட்டணியின் அரசியல் உடன்பாட்டில் நிலைக்கப்பட்டுள்ளதாக ஜசெக பொதுச் செயலாளர் அந்தோனி லோக் சியூ ஃபூக் கூறினார்.
நிலைமை அவ்வாறு இருக்க, எதிர்பாரா விதமாக பொதுத் தேர்தல் நடைபெறும் சூழல் ஏற்பட்டாலும் அதனை எதிர்கொள்வதற்கு தமது தரப்பு தயாராக இருப்பதாகவும் சிரம்பான் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் தெரிவித்தார்.
"அரசியல் கட்சி என்ற வகையில் நாங்கள் எப்போதும் தயாராக இருக்கிறோம். நாம் எல்லா நேரங்களிலும் தயாராக இருக்க வேண்டும். நாடாளுமன்றக் கலைப்பு ஏற்படும் போதெல்லாம், நாங்கள் போட்டியிட நுழைய தயாராக இருக்கிறோம். ஜோகூரில் நடந்தது போல், ஜோகூர் சட்டமன்றம் கலைக்கப்படும் என்பது எங்களுக்கும் தெரியாது," என்றார் அவர்.
இன்று, பெட்டாலிங் ஜெயா, தாமான் செலெராவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் அவ்வாறு கூறினார்.
இதனிடையே, கட்சித் தாவும் நடவடிக்கை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும் அந்தோனி லோக் வலியுறுத்தினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)
© 2024 BERNAMA • உரிமைத் துறப்பு • தனியுரிமைக் கொள்கை • பாதுகாப்பு கொள்கை