BREAKING NEWS | Former inspector general of police (IGP) Tun Mohammed Hanif Omar died at 2.15 am today - Son | Bekas Ketua Polis Negara (KPN) Tun Mohammed Hanif Omar meninggal dunia pada 2.15 pagi tadi - Anak | |
ஜகார்த்தா, 31 மே (பெர்னாமா) -- இந்தோனேசியாவில் சிறார்களுக்கான தடுப்பூசி திட்டத்தை தொடங்குவதற்கு முன்பே, காலாவதியாகி வரும் அதிகமான கொவிட்-19 தடுப்பூசிகளை அழிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
தடுப்பூசிகள் வைப்பதற்கு இடம் இல்லாமல் இருப்பதால், அதிகமான காலாவதியான தடுப்பூசிகளை அழிக்க வேண்டியிருப்பதாக அந்நாட்டு சுகாதார அமைச்சர் புடி குணடி சாதிக்கின் தெரிவித்தார்.
சுமார் 90 லட்சம் தடுப்பூசிகள் மே மாத இறுதிக்குள் காலாவதியாகிவிடும் என்று எதிர்பார்க்கப்படுவதாக, சுகாதார அமைச்சின் செய்தித் தொடர்பாளர், சித்தி நடியா தர்மிஸி கூறினார்.
கொவிட்-19 நோயின் தாக்கம் குறைய தொடங்கிருப்பதால், அனைத்து கட்டுப்பாடுகளும் அரசாங்கத்தால் விரைவில் தளர்த்தப்படும் என்று இந்தோனேசியர்கள் பெரிதும் எதிர்ப்பார்க்கின்றனர்.
ஐந்தில் மூன்று இந்தோனேசியர்கள் இரண்டாவது கொவிட்-19 தடுப்பூசியைச் செலுத்தி கொண்ட வேளையில், 17 விழுக்காட்டினர் ஊக்க தடுப்பூசியைச் செலுத்தி கொண்டுள்ளனர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)
© 2024 BERNAMA • உரிமைத் துறப்பு • தனியுரிமைக் கொள்கை • பாதுகாப்பு கொள்கை