சோன்புரி, 07 ஆகஸ்ட் (பெர்னாமா) -- தாய்லாந்து, பேங்காகின் தென்கிழக்கு பகுதியில் சோன்புரி மாகாணத்தில் வெள்ளிக்கிழமை இரவு விடுதி ஒன்றில் ஏற்பட்ட தீச்சம்பவத்தில் 15 பேர் உயிரிழந்ததோடு 35 பேர் காயமடைந்தனர்.
இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பில் அந்த இரவு விடுதியின் உரிமையாளரை தாய்லாந்து போலீஸ் கைது செய்துள்ளது.
முன்னதாக, பத்தாயா நீதிமன்றம் கைது ஆணையை வெளியிட்டதைத் தொடர்ந்து 27 வயதுடைய அந்த நபர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டார்.
மரணத்தை விளைவித்ததோடு உரிமம் இல்லாமல் இரவு விடுதியை நடத்தியதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
அந்நபர் நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக் கொண்டார்.
உயிரழந்த குடும்பங்களுக்கு தலா 6,231 ரிங்கிட்டும் காயமடைந்தவர்களுக்கு 1,246 ரிங்கிட் இழப்பீடு வழங்கவும் ஒப்புக் கொண்டுள்ளார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: 1130 (ஆஸ்ட்ரோ 502)
© 2024 BERNAMA • உரிமைத் துறப்பு • தனியுரிமைக் கொள்கை • பாதுகாப்பு கொள்கை