BREAKING NEWS | Former inspector general of police (IGP) Tun Mohammed Hanif Omar died at 2.15 am today - Son | Bekas Ketua Polis Negara (KPN) Tun Mohammed Hanif Omar meninggal dunia pada 2.15 pagi tadi - Anak | |
செரியான், 18 செப்டம்பர் (பெர்னாமா) -- எந்த நேரத்திலும் நடைபெறவிருக்கும் 15-வது பொதுத் தேர்தலுக்கான தயார்நிலை பணிகளை ஜி.பி.எஸ் எனப்படும் சரவாக் கூட்டணி கட்சி அதிகரிக்கவுள்ளது.
தேர்தலுக்காக மட்டுமின்றி, ஜி.பி.எஸ் கட்சி எப்போதும் ஏற்புடையதாக இருக்க மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் கடப்பாட்டை அக்கட்சி எப்போதும் கொண்டிருக்கும் என்று அதன் பொதுச் செயலாளர் டத்தோ ஶ்ரீ அலெக்சண்டர் நந்தா லிங்கி தெரிவித்தார்.
நடந்து முடிந்த சரவாக் மாநில தேர்தலுக்குப் பின்னர் ஜி.பி.எஸ்-இன் கேந்திரங்கள் தொடர்ந்து பணியாற்றி வருவதாகவும் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் எப்போதும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் டத்தோ ஶ்ரீ அலெக்சண்டர் நந்தா லிங்கி கூறினார்.
மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுவதை ஜி.பி.எஸ் எப்போதும் உறுதிசெய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
ஜி.பி.எஸ்-இன் கேந்திரங்கள் தயார்நிலைப் பணிகளை மேற்கொள்ள பொதுத் தேர்தல் வரை காத்திருக்க வேண்டிய அவசியமில்லை என்றும் நந்தா லிங்கி குறிப்பிட்டார்.
சரவாக், செரியான், கம்போங் புனான்னில், இன்று ஞாயிற்றுகிழமை, மலேசிய குடும்ப மலிவு விற்பனையைப் பார்வையிட்டப் பின்னர் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் அவ்வாறு தெரிவித்தார்.
-- பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: 1130 (ஆஸ்ட்ரோ 502)]
© 2024 BERNAMA • உரிமைத் துறப்பு • தனியுரிமைக் கொள்கை • பாதுகாப்பு கொள்கை