விளையாட்டு

அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது கூட்டரசு பிரதேசம்

20/09/2022 04:28 PM

கோலாலம்பூர், 20 செப்டம்பர் (பெர்னாமா) -- 2022 சுக்மா விளையாட்டுப் போட்டியின் காற்பந்து ஆட்டத்தில், 5-4 என்று, பினால்டி வாய்ப்பின் மூலம் ஜோகூரைத் தோற்கடித்து கூட்டரசு பிரதேசம் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது.

ஷா ஆலம் UITM அரங்கில், நேற்றிரவு நடைபெற்ற ஆட்டத்தில், கூட்டரசு பிரதேச அணி 13-வது நிமிடத்தில் முதல் கோல் போட்டு முன்னனி வகித்தது.

அந்த வெற்றியை தடுத்து நிறுத்த போராடிய ஜோகூர் முதல் பாதி ஆட்டத்தின் இறுதி நிமிடத்தில் ஒரு கோல் போட்டு ஆட்டத்தைச் சமப்படுத்தியது.

இரண்டாம் பாதி ஆட்டத்திலும் கோல் ஏதும் போடப்படாத நிலையில், வெற்றியாளரை நிர்ணயிக்க கூடுதல் நேரம் வழங்கப்பட்டது.

கூடுதல் நிமிடத்திலும் இரு மாநிலங்களும் கோல் அடிக்காத்தால், ஆட்டம் பினால்டி வாய்ப்புக்கு கொண்டுச் செல்லப்பட்டது.

அதில், 5-4 என்று கூட்டரசு பிரதேசம் ஜோகூரை வீழ்த்தியது.

நாளை நடைபெறவிருக்கும் அறையிறுதி ஆட்டத்தில் கூட்டரசு பிரதேசம் பினாங்கு மாநிலத்தோடு களம் காணவிருக்கிறது.


-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)