விளையாட்டு

எனது சாதனைகளில் மனநிறைவு கொள்கிறேன் - பெடரர்

22/09/2022 07:53 PM

லண்டன், 22 செப்டம்பர் (பெர்னாமா) -- வெள்ளிக்கிழமை நடைபெறவிருக்கும் லெவெர் (LAVER) கிண்ண டென்னிஸ் ஆட்டத்தில் ரோஜர் பெடரர் தனது பரம வைரியான ரஃபேல் நடாலை சந்திக்கவிருக்கின்றார்.

லெவெர் கிண்ண போட்டியுடன் டென்னிஸ் விளையாட்டியில் இருந்து ஓய்வு பெறவிருப்பதாக அறிவித்திருக்கும் தமக்கு, அவ்வாட்டம் நிறைவாக அமையும் என்று அவர் கூறுகிறார். 

முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக தாம் டென்னிஸ் விளையாட்டில் இருந்து ஓய்வு பெறவிருப்பதாக பெடரர் அண்மையில் அறிவித்தார்.

20 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்றிருக்கும் அவரின் இந்த திடீர் அறிவிப்பு பலருக்கு ஆச்சிரியத்தை ஏற்படுத்தியது.

இருப்பினும் டென்னிஸ் வரலாற்றில் ரோஜர் பெடரர் முடிசூடா மன்னனாகத் தொடர்ந்து நிலைத்திருப்பார் என்று அனைவராலும் பாராட்டப்படுகிறார்.

மேலும், தனது சாதனைகளில் மனநிறைவு கொள்வதாக பெடரர் கூறுகிறார்.

-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)