பொது

மழைக்காலத்தை எதிர்கொள்ள மலேசிய இராணுவப் படை தயார்

24/09/2022 10:20 PM

தானா மேரா, 24 செப்டம்பர் (பெர்னாமா) -- மழைக்காலத்தை எதிர்கொள்ள மலேசிய இராணுவப் படை ஏ.டி.எம். தயார் நிலையில் உள்ளது.

உறுப்பினர்கள் மற்றும் அதன் உபகரணங்களைப் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு கொண்டு செல்வதிலும் ஏ.டி.எம். தயாராக இருப்பதாக தற்காப்பு துணை அமைச்சர் டத்தோ ஶ்ரீ இக்மால் ஹிஷாம் அப்துல் அசிஸ் தெரிவித்தார்.

முன்னதாக, நாட்டில் நவம்பர் மாத மத்தியில் கனமழை பெய்யும் என்று மலேசிய வானிலை ஆய்வு மையம் மெட் மலேசியா கணித்துள்ளது.

இதனால் மாத இறுதியில் பெரும் வெள்ளம் ஏற்படுவதற்கு வழிவகுக்கும் என்று அம்மையம் கூறியது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)