புத்ராஜெயா, 02 அக்டோபர் (பெர்னாமா) -- 15-வது பொதுத் தேர்தலில் வெற்றிப் பெற்று ஆட்சியைக் கைப்பற்றுவதில் மட்டும் கவனம் செலுத்தாமல் மக்களின் நலனிலும் அக்கறை செலுத்தப்பட வேண்டும் பெர்சத்து கட்சி வலியுறுத்துகின்றது.
எனேனில், தேர்தலுக்கு முன்பதாக வானிலை, பாதுகாப்புப் படையினரின் தயார்நிலை மற்றும் நாட்டின் செலவுகள் உள்ளிட்ட பல அம்சங்கள் கருத்தில் கொள்ளப்பட வேண்டும் என்று பெர்சத்துவின் துணைத் தலைவர் டத்தோ ஶ்ரீ அஹ்மாட் ஃபைசால் அசுமு தெரிவித்தார்.
பொதுத் தேர்தலை நடத்துவதற்கான அரசாங்கத்தின் தயார்நிலைகளில் அது முக்கிய கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று பெர்சத்து எதிர்பார்ப்பதாக டத்தோ ஶ்ரீ அஹ்மாட் ஃபைசால் கூறினார்.
மக்களின் நலனுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படுவதில் நாட்டின் செலவுகள் போன்ற கூறுகளும் கருத்தில் கொள்ளப்பட வேண்டும் என்று அவர் மேலும் விவரித்தார்.
இவ்வாண்டிலேயே 15-வது பொதுத் தேர்தலுக்கு வழிவகுக்கும் வகையில் நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கான அம்னோ உச்ச மன்றத்தின் பரிந்துரை குறித்து வினப்பட்டபோது அசுமு அவ்வாறு கூறினார்.
-- பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: 1130 (ஆஸ்ட்ரோ 502)]
© 2024 BERNAMA • உரிமைத் துறப்பு • தனியுரிமைக் கொள்கை • பாதுகாப்பு கொள்கை