விளையாட்டு

உலக கிண்ண காற்பந்து போட்டி; கட்டாரை வீழ்த்தி இக்குவாடோர் வெற்றி

21/11/2022 06:51 PM

டோஹா, 21 நவம்பர் (பெர்னமா) -- உலக கிண்ண காற்பந்து போட்டி.

நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு தொடங்கிய முதல் ஆட்டத்தில், உபசரணை நாடான கட்டார், 0-2 என்று இக்குவாடோரிடம் தோல்வியுற்றது.

ஆட்டம் தொடங்கிய 16-வது நிமிடத்தில் கிடைத்த பினால்டி வாய்ப்பை இக்குவடோரின் அந்தோனியோ வெலென்ஸியா கோலாக மாற்றி ரசிகர்களிடையே ஆரவாரத்தைத் தூண்டிவிட்டார்.

தொடர்ந்து, 31-வது நிமிடத்தில் இரண்டாவது கோலையும் அவர்தான் அடித்தர்.

இரண்டாம், பாதி ஆட்டம் கோல்கள் ஏதுமின்றி முடிய, 22-வது உலக கிண்ண காற்பந்து போட்டியில், இக்குவாடோர் முதல் வெற்றியைப் பதிவு செய்திருக்கிறது.

இந்த உலக கிண்ண போட்டியில் போடப்பட்ட முதல் கோலும் அதை போட்ட முதல் ஆட்டக்காரரும் அந்தோனியோ வெலென்ஸியாதான்.

தூரின், இத்தாலி

மற்றொரு நிலவரத்தில், உலக தரவரிசையில் முன்னணிலை வகிக்கும் சிறந்த எட்டு வீரர்கள் மட்டும் பங்கேற்கும் ஆண்களுக்கான வெற்றியாளர் கிண்ண டென்னிஸ் போட்டியில் செபிரியாவின் நோவாக் ஜோக்கோவிச் வாகைச் சூடியிருக்கின்றார்.

இத்தாலியின் துரின் நகரில், நேற்று நடந்த இறுதிப் போட்டியில் நோவக் ஜோகோவிச், நார்வேயின் காஸ்பர் ரூட்டைத் சந்தித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)