உலகம்

உக்ரேனில் மின்சார விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது

24/11/2022 02:53 PM

கீவ், 24 நவம்பர் (பெர்னாமா) -- உக்ரேனில் நீடித்து வரும் நெருக்கடியினால், அந்நாட்டில் மின்சார விநியோகம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

கீவ்வில், தொடர்ந்து மின்சார விநியோகத் துண்டிப்பும் முறையான பராமரிப்புச் சேவை இல்லாததாலும் பெரும்பாலான மக்கள் புறநகர் பகுதிகளுக்கு இடமாறி இருக்கின்றனர்.

இதனால், வீட்டு விலை 20 விழுக்காடு குறைந்துள்ளது.

அதேவேளையில், மக்கள் பலர் புறநகர் பகுதிகளில் அதிக விலையில் வீடுகளை வாடகைக்கு எடுக்கவும் தயாராகி உள்ளனர்.

-பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)