உலகம்

பெண் கொலை; ஆடவர் கைது

25/11/2022 08:13 PM

புது டெல்லி, 25 நவம்பர் (பெர்னாமா) -- 2018ஆம் ஆண்டில் ஆஸ்திரேலிய கடற்கரைப் பகுதியில் பெண் ஒருவரை கொலை செய்த குற்றத்திற்காக ஆடவர் ஒருவரை இந்திய போலீஸ் கைது செய்துள்ளது.

குற்றஞ் சாட்டப்பட்ட ராஜ்விந்தர் சிங் புது டெல்லியிலுள்ள ஒரு கட்டிடத்தில் இருந்து போலீஸ் அதிகாரிகளால் வழிமறித்து பிடிக்கப்பட்டார்.

கெய்ர்ன்ஸ் நகருக்கு வடக்குப் பகுதியிலுள்ள கடற்கரைக்கு அருகில், 24 வயதுடைய தோயா கோர்டிங்லிவை கொலை செய்ததால சிங் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

கோர்டிங்லி கொலை செய்து விட்டு இந்தியாவிற்கு திரும்பிவிட்ட சிங்கை கைது செய்ய, தகவல் வழங்குபவருக்கு 10 லட்சம் ரிங்கிட் வெகுமதி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)