பொது

சபா காகாசான் கட்சியில் இணைந்து அதற்குத் தலைமையேற்க ஹஜிஜி தயார்

29/01/2023 05:08 PM

கோத்தா கினபாலு, 29 ஜனவரி (பெர்னாமா) -- சபா காகாசான் ரக்யாட் கட்சியில் இணைந்து அதற்குத் தலைமையேற்கப் போவதை அம்மாநில முதலமைச்சர் டத்தோ ஶ்ரீ ஹஜிஜி நோர் உறுதிப்படுத்தினார்.

இக்கட்சி கடந்த டிசம்பர் ஒன்பதாம் தேதி முதல் சபா மக்கள் கூட்டணி, GRS-இன் கூட்டணிக் கட்சியாக ஏற்றுக் கொள்ளப்பட்டதாகவும் தமது போராட்டத்தை தொடர்வதற்கு இது பக்கபலமாக இருக்கும் என்றும் ஹஜிஜி தெரிவித்தார்.

''இறைவன் அருளால் அந்தக் கட்சியை ஒரு உள்ளூர் கட்சியாக எங்களின் தொடர் போராட்டத்திற்குப் பயன்படுத்தவுள்ளோம். ஜிஆர்எஸ் கீழ் செயல்படுவோம். உண்மையாக, அந்தக் கட்சி தயாராக உள்ளது. நாங்கள் அதனை எடுத்துக் கொள்கின்றோம்,'' என்றார் அவர்.

சபா, கோத்தா கினாபாலுவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஒரு பட்டமளிப்பு நிறைவு விழா மற்றும் மாணவர்கள் பிரிவின் தொடக்க விழாவில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் அவ்வாறு தெரிவித்தார்.

கடந்த 2013-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28-ஆம் தேதி, சபா காகாசான் ரக்யாட் கட்சி பதிவு செய்யப்பட்டு உள்ளூர் அரசியல் கட்சியாகச் செயல்பட்டு வருகின்றது.

கடந்த ஆண்டு டிசம்பர் 10-ஆம் தேதி பெர்சத்து கட்சியிலிருந்து அது வெளியாகியது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)