உலகம்

பெருவில் பேருந்து குடை சாய்ந்ததில் 24 பேர் பலி!

29/01/2023 06:19 PM

பியூரா, 29 ஜனவரி  (பெர்னாமா) -- பெரு நாட்டின் வடப் பகுதியான பியூரா எனுமிடத்தில், 60 பேருடன் சென்ற பயணிகள் பேருந்து ஒன்று குடை சாய்ந்த சம்பவத்தில் குறைந்தது 24 பேர் பலியாகினர்.

எஞ்சியவர்களின் நிலைமை குறித்த தகவல்களை அதிகாரிகள் தெரிவிக்கவில்லை.

இவ்விபத்து, பெரு நாட்டின் வடக்கில் இருக்கும் எல் அல்தோ எனுமிடத்தில் நிகழ்ந்தது.

அப்பேருந்து நல்ல நிலையிலேயே இருந்தது விசாரணை மூலம் தெரிய வந்ததாக அதிகாரிகள் கூறினர்.

பெருவின் உட்புறப் பகுதிகளில் இதுபோன்ற விபத்துகள் நிகழ்வதற்கு சாலை அமைப்பு முறைகளே முக்கிய காரணங்களாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

இதனால், அவ்வப்போது அதுபோன்ற பகுதிகளில் விபத்துகள் நிகழ்ந்து வருவதாகக் கூறப்பட்டது.

கடந்த 2021-ஆம் ஆண்டில், எண்டிஸ் மலைக்கு அப்பால் இருக்கும் ஒரு நெடுஞ்சாலையில் பேருந்து ஒன்று தடம் புறண்ட சம்பவத்தில் 29 பேர் பலியாகி இருந்தனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)