மியாமி, 01 ஏப்ரல் (பெர்னாமா) -- உலகின் முதல் நிலை விளையாட்டாளரான கார்லஸ் அல்கராஸை தோற்கடித்து யானிக் சின்னர், மியாமி பொது டென்னிஸ் போட்டியின் இறுதி சுற்றுக்கு தேர்வாகினார்.
நேற்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில், உலகின் பத்தாம் நிலை விளையாட்டாளரான யானிக் சின்னரின் வெற்றி அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இவ்வாட்டத்தில் கார்லஸ் அல்கராஸ் எளிதாக வெற்றி பெறுவார் என்று கணிக்கப்பட்டிருந்தாலும், முதல் சுற்றில் கடுமையாகவே போராடி 6-7 என்று வெற்றி பெற்றார்.
இருப்பினும் அடுத்த இரண்டு சுற்றுகளை 6-4 6-2 என்ற புள்ளிகளில் எளிதாக வெற்றி பெற்று யானிக் சின்னர் ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.
மார்ச் மாதம் நடைபெற்ற இந்தியன் வெல்ஸ் டென்னிஸ் போட்டியின் கிண்ணத்தை வென்ற கார்லஸ் அல்கராஸுக்கு இத்தோல்வி அதிர்ச்சியை தந்துள்ளது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)
© 2024 BERNAMA • உரிமைத் துறப்பு • தனியுரிமைக் கொள்கை • பாதுகாப்பு கொள்கை