உலகம்

மும்பையில் வெள்ளம்; நால்வர் பலி

26/09/2024 06:53 PM

மும்பை, 26 செப்டம்பர் (பெர்னாமா) -- இந்தியா மும்பையில் கடந்த சில தினங்களாகப் பெய்து வரும் தொடர் மழையினால் ஏற்பட்டிருக்கும் வெள்ளம் காரணமாக நால்வர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், அந்நகரம் வெள்ளத்தில் மூழ்கியிருப்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கிறது.

இன்று தொடங்கி பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

நேற்று மாலை, மும்பையில் 275 மில்லி மீட்டர் மழைப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் பயன்படுத்து சாலை மற்றும் இரயில் போக்குவரத்து முற்றாக நிறுத்தப்பட்டிருக்கிறது.

கனமழை பெய்யும் என்று அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருப்பதால், புனே செல்லவிருந்த பிரதமர் நரேந்திர மோடி தமது பயணத்தை இரத்து செய்துள்ளார்.

மோசமான வானிலை தொடரும் என்று கணிக்கப்பட்டிருப்பதால், பொதுமக்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைப்பிடிக்கும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)