குவாந்தான், 10 ஆகஸ்ட் (பெர்னாமா) -- தமிழ் நேசன் நாளிதழின் முன்னாள் நிருபர் வீ.தவசேகரன் இன்று காலமானார்.
கடந்த சில ஆண்டுகளாக வயிற்றுப் புற்றுநோயால் அவதியுற்று வந்த 67 வயதுடைய அவர் இன்று அதிகாலை 2.00 மணியளவில் இந்திரா மக்கோத்தாவிலுள்ள மலேசிய அனைத்துலக இஸ்லாமியப் பல்கலைக்கழக மருத்துவமனையில் உயிரிழந்தார்.
அவருக்கு செல்வசேகரன் மற்றும் பாக்கியா என்று இரண்டு பிள்ளைகள் உள்ளனர். புற்று நோயால் கடந்த ஆண்டு இறுதியில் அவரின் உடல்நிலை மோசமடைந்தது. இந்நிலையில், கடந்த ஜூலை மாத இறுதியில் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாக பாக்கியா கூறினார்.
இன்று தாமான் செடேராவாசியில் உள்ள தமது வீட்டில் செய்தியாளர்களிடம் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தவசேகரன் கடந்த 30 ஆண்டுகளாக தமிழ்நேசனில் வட்டார நிருபராக பணியாற்றி வந்தார். பகாங் மாநிலம் மட்டுமல்லாது கிளந்தான் மற்றும் திரங்கானு மாநில செய்திகளையும் சேகரித்து வந்தார். இவரின் மறைவு பத்திரிக்கை துறைக்கு பேரிழப்பாகும்.
--பெர்னாமா
© 2024 BERNAMA • உரிமைத் துறப்பு • தனியுரிமைக் கொள்கை • பாதுகாப்பு கொள்கை