டெக்சாஸ், 28 மே (பெர்னாமா) -- கடந்த 24-ஆம் தேதி, டெக்சஸ் மாநிலத்தில் அந்த தொடக்கப் பள்ளியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் போது, தங்களைத் தற்காத்துக் கொள்ள சிறுவர்கள் பாதுகாப்பு தேடி ஓடிய அந்த பரிதாப தருணங்கள் புகைப்படங்களாக கிடைத்திருக்கின்றன.
வகுப்பறைகளில் இருந்து சிறுவர்கள் பலர் பதற்றதுடன் ஓடுவது, இன்னும் சிலர் அவசர அழைப்பு மேற்கொண்டது, வகுப்பறையில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் நிகழும் போது வெளியில் இருந்த சூழல்கள் அனைத்து புகைப்படங்கள் வாயிலாக பேசி இருக்கின்றன.
அதோடு, போலீசாரரின் நடவடிக்கைகள், பெற்றோர்களின் பரிதவிப்பு, பிள்ளைகளை பாதுகாக்க மேற்கொள்ளப்பட்ட போராட்டங்களும் அதில் அடங்கும்.
இதனிடையே, இதுபோன்ற அசம்பாவிதங்கள் இனிமேலும், நிகழமால் இருக்க தமது தரப்பு அதிரடி முடிவுகளை எடுக்கும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)
© 2024 BERNAMA • உரிமைத் துறப்பு • தனியுரிமைக் கொள்கை • பாதுகாப்பு கொள்கை