புத்ராஜெயா, 06 ஏப்ரல் (பெர்னாமா) -- ஈ.சி.ஆர்.எல் எனப்படும் கிழக்குக்கரை ரயில் இணைப்புத் திட்டத்திற்கு சம்பந்தப்பட்ட மாநில நிர்வாகத்திடமிருந்து ஒத்துழைப்பு கிடைக்கும் என்று போக்குவரத்து அமைச்சு நம்பிக்கைக் கொண்டிருக்கிறது.
இதன் தொடர்பான பேச்சுகள் நடத்தப்பட்டு வருவதாகவும் சிலாங்கூர் உட்பட அனைத்து மாநிலங்களுடனும் ஒத்துழைப்பு மேற்கொள்ள தமது தரப்பு முயற்சித்து வருவதாகவும் போக்குவரத்து அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் வீ கா சியோங் தெரிவித்திருக்கிறார்.
சிலாங்கூரில் கையாளப்பட வேண்டிய சுற்றுச்சூழல் உள்ளிட்ட விவகாரங்களை உட்படுத்தி அம்மாநிலத்திலுள்ள 17 நிறுவனங்களுடன் 37 சந்திப்புகளை போக்குவரத்து அமைச்சு நடத்தியிருப்பதாக டத்தோ ஶ்ரீ டாக்டர் வீ கா சியோங் குறிப்பிட்டார்.
-- பெர்னாமா
© 2024 BERNAMA • உரிமைத் துறப்பு • தனியுரிமைக் கொள்கை • பாதுகாப்பு கொள்கை