சிட்னி, 06 ஜூலை (பெர்னாமா) -- இவ்வாண்டு மூன்றாவது முறையாக ஏற்பட்டிருக்கும் கடுமையான வெள்ளப் பேரிடரால், நியூ சவுத் வேல்ஸ்ல் மாநிலத்தில் உள்ள 85,000-க்கும் அதிகமானோர் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கின்றனர்.
வீடுகளில் அகப்பட்டுக் கொண்டவர்களைக் காப்பாற்றும் பணிகளில் மீட்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த ஜூலை 2-ஆம் தேதி முதல் பெய்து வரும் மழையினால் சிட்னியைச் சுற்றியுள்ள நதி நீர் சேகரிப்பு தடாகங்களின் கொள்ளளவு நிரம்பி வருவதாக அதிகாரிகள் கூறினர்.
மழை தொடர்ந்து பெய்து வருவதால் வெள்ள எச்சரிக்கை அடுத்த வாரம் வரை நீட்டிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)
© 2024 BERNAMA • உரிமைத் துறப்பு • தனியுரிமைக் கொள்கை • பாதுகாப்பு கொள்கை