பொது

தி.எல்.டி.எம் ஹெலிகாப்டர் விபத்தில் 10 உறுப்பினர்கள் பலி

23/04/2024 02:54 PM

லூமுட், 23 ஏப்ரல் (பெர்னாமா) -- இன்று காலை, 9.32 மணியளவில், அரச மலேசிய கடற்படை, தி.எல்.டி.எம் தளத்தில் இரண்டு ஹெலிகாப்டர்கள் மோதிய விபத்தில், 10 உறுப்பினர்கள் பலியாகியதாக கடற்படை தலைமையகத்தின் வியூக தகவல் தொடர்பு பிரிவு உறுதி செய்துள்ளது.

கடல்சார் செயல்பாட்டு நடவடிக்கை ஹெலிகாப்டர், HOM-AW139-மில் பயணித்த ஏழு உறுப்பினர்கள் மற்றும் Fennec TLDM-மில் பயணித்த மூன்று உறுப்பினர்களும் அவ்விபத்தில் பலியாகியுள்ளனர்.

அவர்கள் அனைவரும் சம்பவ இடத்திலேயே பலியாகியதாகவும், அடையாளம் காணும் நடவடிக்கைக்காக லூமுட், டி.எல்.டி.எம் தள மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டிருப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக, இரண்டு ஹெலிகாப்டர்கள் மோதி, விழுந்த காணொளி பரவலாக பகிரப்பட்டு வருவதால், பொதுமக்கள் அதனை மேலும் பகிர்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)