ரமால்லா, 4 ஜூலை (பெர்னாமா) -- காசாவில், கடந்த அக்டோபர் 7ஆம் தேதி முதல் இஸ்ரேல் தாக்குதல் மேற்கொள்ளத் தொடங்கியதிலிருந்து கைது செய்யப்பட்ட பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 9,520ஆக அதிகரித்துள்ளது.
பாலஸ்தீன கைதி மற்றும் முன்னாள் கைதி விவகார ஆணையமும் பாலஸ்தீன கைதிகள் சங்கமும் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளன.
அந்த எண்ணிக்கை ராணுவ கண்காணிப்புச் சாவடி வழி வீட்டிலிருந்து கைது செய்யப்பட்டவர்களையும் உள்ளடக்கி உள்ளதாக சம்பந்தப்பட்ட அத்தரப்புகள் வெளியிட்ட கூட்டு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், நெருக்குதல் அளிக்கப்பட்டதால் சரணடைந்தவர்களும் பிணைக்கைதிகளாக பிடிப்பட்டவர்களும் அவர்களில் அடங்குவர் என்று பாலஸ்தீன செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)