விளையாட்டு

சுக்மா விளையாட்டுப் போட்டி; வசதி வாய்ப்புகள் திருப்தி அளிக்கின்றன

17/08/2024 07:32 PM

கூச்சிங் ,17 ஆகஸ்ட் (பெர்னாமா) --  சரவாக்கில் நடைபெற்று வரும், 2024ஆம் ஆண்டின் சுக்மா விளையாட்டு போட்டிக்கு பல்வேறு தளங்களும் வசதிகளும் சிறந்த நிலையில் தயார் செய்யப்பட்டிருப்பது குறித்து இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சு பாராட்டு தெரிவித்திருக்கின்றது.

இரு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் இந்த விளையாட்டு போட்டியின் நற்பெயரையும் மதிப்பையும் மேம்படுத்த சரவாக் அரசாங்கம் தமது உயர் பங்களிப்பைக் காட்டுவதாக அதன் துணை அமைச்சர் ADAM ADLI தெரிவித்தார்.

''எனவே, 21ஆவது சுக்மா போட்டி புதிய விளையாட்டாளர்களின் திறனை வளர்ப்பதற்கு ஒரு தளமாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். இதனால் நாடு முழுவதும் உள்ள நமது விளையாட்டாளர்களுக்கும் தங்களின் (திறனை) கண்டுபிடிக்க இது ஒரு தளமாக இருக்கும்,'' என்றார் அவர்.

இதனிடையே, 2027ஆம் ஆண்டு சீ விளையாட்டு போட்டிகளை ஏற்பாடு செய்வது தொடர்பில் விவாதிக்க இன்னும் கால அவகாசம் இருப்பதாக அடாம் அட்லி விளக்கினார்.

சுக்மா போட்டிக்கான மலேசிய தேசிய செய்தி நிறுவனம், பெர்னாமாவின் நடவடிக்கை மையத்திற்கு வருகை புரிந்த அவரை, அந்நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரி நூருல் அஃபிடா கமாலுடினும் தலைமை செய்தி ஆசிரியர் அருள் ராஜூ துரை ராஜூம் வரவேற்றனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ) 502