விளையாட்டு

மென்செஸ்டர் சிட்டி மீது 115 குற்றச்சாட்டுகள்: குற்றம் நிரூபிக்கப்பட்டால் தண்டனை விதிக்கப்படும்

17/08/2024 07:37 PM

கைல் வாக்கர்,17 ஆகஸ்ட் (பெர்னாமா) --  மென்செஸ்டர் சிட்டி கிளப் மீது சுமத்தப்பட்டிருக்கும் 115 குற்றச்சாட்டுகள் வரும் செப்டம்பர் மாதத்தில் நிரூபிக்கப்பட்டால், இங்கிலாந்து பிரிமியர் லீக் ஏற்பாட்டாளரால் தண்டனை விதிக்கப்படும்.

ஆதரவு நிதியின் வரியை அதிகரித்தது, செயல்திட்டம் உட்பட கிளப்பின் நிதிச் செலவுகள் பற்றிய சரியான தகவலை வெளியிடாதது மற்றும் FFP எனப்படும் FINANCIAL FAIR PLAY தொடர்பில் வெளிப்படையாக செயல்படாதது ஆகியவை உட்பட பல முக்கியமான விதிகளை, மென்செஸ்டர் சிட்டி கடந்த ஆண்டு பிப்ரவரியில் மீறியதாக கூறப்படுகின்றது.

மென்செஸ்டர் சிட்டியின் நிர்வாகி பெப் கார்டியோலா, இப்பிரச்சனைக்கு எதிராக வலுவான ஆதாரங்களை திரட்டத் தவறி, குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகமான அளவில் அவ்வணியின் புள்ளிகள் கழிக்கப்படுவதோடு, அபராதம் விதிக்கப்பட்டு, இரண்டாவது லீக் பிரிவுக்கும் தள்ளப்படலாம்.

இருப்பினும், அக்கிளப் எவ்விதமான தவறும் செய்யவில்லை என்றும் நீதிமன்ற வழக்கு விசாரணையின்போது தேவையான தகவலைக் கொண்டுள்ளதாகவும் கூறியுள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ) 502