பொது

இரு பெண்களைத் தாக்கியதாக ஆடவர் மீது குற்றச்சாட்டு

19/08/2024 04:15 PM

பெட்டாலிங் ஜெயா, 19 ஆகஸ்ட் (பெர்னாமா) -- இரு வாரங்களுக்கு முன்னர், சிலாங்கூர் கிளானா ஜெயாவில் உள்ள Al-Ehsaniah Ahmadiah சுராவ்வின் கழிப்பறையில் rambo வகை கத்தியைப் பயன்படுத்தி இரு பெண்களை தாக்கிய ஆடவர் ஒருவர், கொலை செய்ய முயற்சித்ததாக இன்று பெட்டாலிங் ஜெயா செஷன்ஸ் நீதிமன்றத்தில் இரு குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கினார்.

எனினும், நீதிபதி நோர் ருசிலாவாத்தி முஹமட் நோர் முன்னிலையில் வாசிக்கப்பட்ட அவ்விரு குற்றச்சாட்டுகளையும் விளம்பரத் துறையில் பகுதிநேர பணியாளராகப் பணிபுரியும் 46 வயதுடைய முஹமட் ஃபெர்டாவுஸ் மாஷுட் மறுத்துள்ளார்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சம் 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க வகைச் செய்யும் குற்றவியல் சட்டம் செக்‌ஷன் 307-இன் கீழ் இவ்விரு குற்றச்சாட்டுகளும் விசாரிக்கப்படுகின்றன.

இந்நிலையில், 15,000 ரிங்கிட் ஜாமின் தொகை மற்றும் தனிநபர் ஒருரின் உத்தரவாதத்தின் பேரில் குற்றம் சாட்டப்பட்டவர் விடுவிக்கப்பட்டார்.

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]