விளையாட்டு

சியாவிற்கு பிரதமர், துணைப் பிரதமர்கள் வாழ்த்து

03/09/2024 04:58 PM

கோலாலம்பூர், 03 செப்டம்பர் (பெர்னாமா) -- 2024 பாரிஸ் பாராலிம்பிக் போட்டியில், முதல் தங்கப் பதக்கத்தை வென்ற, நாட்டின் பூப்பந்து வீரர் சியா லெய்க் ஹாவுக்கு பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் வாழ்த்து தெரிவித்துக் கொண்டார். 

நாட்டின் பெயரை உலக அரங்கில் பிரபலபடுத்திய லெய்க் ஹாவ்வின் இச்சாதனை பெருமைக்குரியது என்று தமது X  பக்கத்தில் பிரதமர் பதிவிட்டிருந்தார்.

இதனிடையே, லெய்க் ஹாவ் அடைந்திருக்கும் இவ்வெற்றி துணைப் பிரதமர்களான டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மட் சாஹிட் ஹமிடி மற்றும் டத்தோ ஶ்ரீ ஃபடில்லா யூசோப் ஆகியோரின் பாராட்டுகளையும் பெற்றுள்ளது.

உலகின் மிக உயர்ந்த மட்டத்தில் போட்டியிடக்கூடிய விளையாட்டு வீரர்களை மலேசியா கொண்டுள்ளதை, லெய்க் ஹாவ்வின் வெற்றி நிரூபித்துள்ளதாக, டாக்டர் அஹமட் சாஹிட் தமது முகநூல் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

36 வயதான லெய்க் ஹாவ்வின் வெற்றி, கடந்த வார இறுதியில், 67ஆவது தேசிய தினத்தைக் கொண்டாடிய மலேசியாவிற்கான பரிசாகும்  என்று ஃபடில்லா யூசோப் தமது முகநூல் பதிவில் தெரிவித்திருந்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)
 

 KEYWORDS
 தொடர்புடைய செய்திகள்
 பரிந்துரை