உலகம்

இம்ரான் கானின் கட்சி உறுப்பினர்கள் கைது

10/09/2024 06:17 PM

இஸ்லாமாபாத், 10 செப்டம்பர் (பெர்னாமா) --  சிறை தண்டனை எதிர்நோக்கி வரும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் கட்சி உறுப்பினர்களான குறைந்தது, இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டனர்.

கட்சித் தலைவர்களும் போலீசாரும் இத்தகவலை உறுதிப்படுத்தினர்.

கைதானவர்களில், பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப், PTI கட்சி தலைவர் கோஹர் கானும் ஒருவராவார்.

அதோடு, அக்கட்சியின் தொகுதி தலைவர்களின் ஒருவரான ஷேர் அப்சல் மார்வாட்டுடன் மற்றுமொரு உறுப்பினரையும் போலீசார் கைது செய்த காணொளிகள் வெளியாகி உள்ளன.

அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் பற்றிய விவரங்களோ அல்லது கைது நடவடிக்கையின் அதிகாரப்பூர்வ தகவலோ குறித்து இதுவரை அறிக்கை எதுவும் வெளியாகவில்லை.

இம்ரான் கானை விடுவிக்கக் கோரி, PTI கட்சி பெரிய அரசியல் கூட்டத்தை நடத்திய ஒரு நாளுக்குப் பிறகு இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)