விளையாட்டு

பாரா விளையாட்டாளர்களின் மேம்பாட்டிற்காக நிதி கோரிக்கை

12/09/2024 07:33 PM

கோலாலம்பூர், 12 செப்டம்பர் (பெர்னாமா) -- பாரா விளையாட்டாளர்களின் மேம்பாட்டிற்காக, நிதி அமைச்சிடம் கூடுதல் நிதியை பெற இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சு விண்ணப்பித்துள்ளது.

சிறந்த ஆற்றலை வெளிபடுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்படும் திட்டங்களுக்கு இந்த ஒதுக்கீடு பயன்படுத்தப்படும் என்று அதன் அமைச்சர் ஹன்னா யோ தெரிவித்தார்.

இன்னும் அதிகமான அனைத்துலக விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ள வேண்டும் என்ற நிலைப்பட்டை பேரிஸ் பாராலிம்பிக் போட்டியில் கலந்து கொண்ட விளையாட்டாளர்களை தம்மிடம் வெளிப்படுத்தியதாக அவர் கூறினார்.

2024 வரவு செலவு திட்டத்தில் போடியம் திட்டத்திற்கு அரசாங்கம் 4 கோடி ரிங்கிட்டை ஒதுக்கியிருந்தது.

அதில் ஒரு கோடி ரிங்கிட் பாரா விளையாட்டாளர்களுக்கு பயன்படுத்தப்பட்டதாக ஹன்னா யோ விளக்கினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)