விளையாட்டு

17 வயதுக்குட்பட்ட தேசிய காற்பந்து அணி பயிற்றுநர் கிறிஸ்டபர் ராஜ் பதவி விலகல்

28/10/2024 07:55 PM

கோலாலம்பூர், 28 அக்டோபர் (பெர்னாமா) -- 2025-ஆம் ஆண்டு ஆசிய கிண்ண காற்பந்து போட்டிக்கு தேர்வு பெறத் தவறியதால், 17 வயதுக்குட்பட்ட தேசிய காற்பந்து அணி பயிற்றுநர் கிறிஸ்டபர் ராஜ் உடனடியாக பதவி விலகுவதாக அறிவித்திருக்கிறார்.

தேசிய அணியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் பொறுப்பை ஏற்கும் புதிய முகங்களுக்கு வழிவிடும் நோக்கில், அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அவர் கூறினார்.

17 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண காற்பந்து போட்டிக்கு தேசிய அணி தேர்வாகியது.

அந்த அடைவு நிலையை இவ்வாண்டு தொடராமல் போனதற்கு தாம் கவலை அடைவதாக, இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் கிறிஸ்டபர்  தெரிவித்திருக்கிறார்.

17 வயதுக்குட்பட்ட தேசிய காற்பந்து அணிக்கு பயிற்றுநராக தம்மை நியமித்த மலேசிய காற்பந்து சங்கத்திற்கு அவர் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

நேற்று, லாவோஸ் வியன்டியனில் நடைபெற்ற H குழுவுக்கான ஆட்டத்தில், ஐக்கிய அரபு சிற்றரசுடன் மலேசிய 0-2 என்ற கோல்களில் தோல்வி கண்டது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30  (ஆஸ்ட்ரோ 502)