Ad Banner
Ad Banner
Ad Banner
Ad Banner
Ad Banner
 பொது

சிலாங்கூர் & புத்ராஜெயா இடையிலான எல்லை நிர்ணய செயல்முறை இவ்வாண்டு இறுதிக்குள் முடிவடையும்

27/05/2025 06:24 PM

ஷா ஆலம், 27 மே (பெர்னாமா) -- சிலாங்கூர் மற்றும் புத்ராஜெயா இடையிலான எல்லை நிர்ணய செயல்முறை இவ்வாண்டு இறுதிக்குள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இருப்பினும், சிலாங்கூர் மற்றும் கோலாலம்பூருக்கு இடையிலான எல்லை நிர்ணயம் சிக்கலான செயல்முறையை உட்படுத்தியிருப்பதால், சற்று கால அவகாசம் தேவைப்படும் என்று சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோ ஶ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார். 

''புத்ராஜெயாவில் இந்த செயல்முறையின் பெரும்பகுதி கிட்டத்தட்ட நிறைவடைந்து விட்டது. இந்த ஆண்டு இறுதிக்குள் இது நிறைவடையும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். கே.எல் - சிலாங்கூர் ஒப்பந்தம் புத்ராஜெயா எல்லை நிர்ணயத்தை உட்படுத்தியது. அம்பாங்க்-கேல், சுபாங் - கே.எல் பகுதிகளை உட்படுத்தியது இது. சிக்கலான பகுதிகளை உட்படுத்தியதால் சிறிது காலம் நீடிக்கும். இந்த ஆண்டு இறுதிக்குள் நாம் அதை இறுதி செய்துவிடலாம்,'' என்று அவர் கூறினார்.

இன்று சிலாங்கூர் இஸ்லாமிய துறையின் ஆசிரியர் தினக் கொண்டாட்டத்தைத் தொடக்கி வைத்த பின்னர் அமிருடின் ஷாரி இத்தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

நேற்று புத்ராஜெயாவில் கூட்டரசு பிரதேசத்திற்கான பிரதமர் துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் சலிஹா முஸ்தபா உடனான சந்திப்பு குறித்து அவர் அவ்வாறு கருத்துரைத்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)