நேபாளம் , 29 மே (பெர்னாமா) - திபெட் வழியாக கோமொலங்மா என்று அறியப்படும் எவரெஸ்ட் மலையை தெற்கு வழியாக 14 நாட்களில் நான்கு முறை ஏறி சாதனை படைத்த 29 வயது நேபாள மலையேறி தாஷி கால்சன் ஷெர்பாவுக்கு செவ்வாய்க்கிழமை காத்மாண்டு விமான நிலையத்தில் சிறப்பு வரவேற்பு நல்கப்பட்டது. 2017-ஆம் ஆண்டில் மலையேறும் வழிகாட்டியாக தமது வாழ்க்கையைத் தொடங்கிய அவர், ஈராண்டுகளுக்குப் பிறகு முதன் முறையாக கோமொலங்மா மலையை அடைந்தார்.
இவ்வாண்டில் வசந்த காலம் தொடங்குவதற்கு முன்னதாகவே அவர் நேபாள வழியாக மூன்று முறையும் சீனா வழியாக ஒரு முறையும் வெற்றிகரமாக மலை உச்சியைச் சென்றடைந்துள்ளார்.
இந்த பருவத்தில் மலையேறும் மற்றவர்களுக்கு தெற்கு சரிவில் பாதையை அமைத்துக் கொடுக்கும் பொறுப்பான முன்னோடிக் குழுவின் உறுப்பினராக அவர்
மே 9-ஆம் தேதி எவரெஸ்ட் மலையை சென்றடைந்தார்.
பின்னர், மே 14, 19 மற்றும் 23 ஆகிய தேதிகளில், அவர் கூடுதலாக மூன்று முறை மலை ஏறி சாதனைப் படைத்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)