Ad Banner
Ad Banner
Ad Banner
Ad Banner
Ad Banner
 பொது

சுங்கை பகாங்கில் மூழ்கி ஆடவர் மரணம்

29/05/2025 07:55 PM

மாரான், 29 மே (பெர்னாமா) --   மாரான், பெக்கான் அவா கம்போங் பாயா பாசிர் அருகிலுள்ள சுங்கை பகாங்கில் மூழ்கி இறந்ததாக நம்பப்படும் 58 வயதுடைய ஆடவர் ஒருவரின் சடலம், நேற்று கண்டெடுக்கப்பட்டது.   

நேற்று பிற்பகல் மணி 1.30-க்கு, ஆற்றில் சடலம் ஒன்று மிதக்குவதாக கூறி அப்பகுதி மக்களிடமிருந்து போலீஸ் புகார் கிடைத்ததாக, மாரான் மாவட்ட போலீஸ் தலைவரும் கண்காணிப்பாளருமான வோங் கிம் வாய் தெரிவித்தார்.  

முழுமையாக உடை அணிந்த நிலையில், தலைகீழாக மிதந்தும், கரையிலிருந்து சுமார் சுமார் 30 மீட்டர் தொலைவில் அவ்வாடவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக, அவர் கூறினார்.

மேலும், ஆற்றில் மிதந்துக் கொண்டிருந்த சில குப்பைகள் மற்றும் மரக்கட்டைகளுக்கு மத்தியில் உடல் சிக்கிக் கொண்டிருந்த உடலை தீயணைப்பு அதிகாரிகள் மீட்டதாக அவர் தெரிவித்தார்.

இதனிடையே, பாதிக்கப்பட்டவரின் பணப்பை உட்பட அடையாள அட்டையை தமது சட்டைப்பையிலிருந்து கண்டெடுத்ததாக, இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் வோங் குறிப்பிட்டிருந்தார். 
 
-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)