ஜெரான்துட், 9 ஜூன் (பெர்னாமா) -- மே 30-ஆம் முதல் காணாமல் போனதாகக் கூறப்படும் மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவரின் உடல், ஜெராந்துட் தாமான் ஸ்ரீ எம்பன் பகுதியில் இன்று காலை கண்டெடுக்கப்பட்டது.
போலீஸ், தீயணைப்புத் துறை, ஏபிஎம், கே9 பிரிவு மற்றும் கிராமத்தைச் சேர்ந்த 40 பேரின் ஒத்துழைப்பால் காலை மணி 10.20-க்கு சப்ரி இஸ்மாயில் எனும் அவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக ஜெரான்துட் மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ரிடென்டன் சுக்ரி முஹமாட் தெரிவித்தார்.
"பாதிக்கப்பட்டவரின் உடல் அவரது வீட்டிலிருந்து சுமார் 300 மீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஒரு செம்பனை தோட்டத்திற்கு அருகில் கண்டெடுக்கப்பட்டது. ஒரு மணி நேரத்திற்குப் பிறகு உடல் வெளியே எடுக்கப்பட்டு ஜெரான்துட் மருத்துவமனை தடயவியல் பிரிவுக்கு அனுப்பப்பட்டது.
தெங்கு அம்புவான் அஃப்சான் மருத்துவமனையில் பிரதேப் பரிசோதனை மேற்கொள்ளப்படும். நாளை காலை மணி 10 அளவில் மரணத்திற்கான காரணம் தெரிவிக்கப்படும்," என்று அவர் கூறினார்.
36 வயதான சப்ரியை காணவில்லை என்று அவரின் அக்கா 38 வயதான சுபாய்டா இஸ்மாயில் போலீஸ் புகார் அளித்திருந்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)