Ad Banner
Ad Banner
Ad Banner
Ad Banner
 உலகம்

குடியேற்றக் கொள்கைகளுக்கு எதிராகத் தொடங்கிய ஆர்ப்பாட்டங்கள் தற்போது அமெரிக்கா முழுவதும் தீவிரமடைந்தன

12/06/2025 07:39 PM

லாஸ் ஏஞ்சல்ஸ், 12 ஜூன் (பெர்னாமா) -- வெளிநாட்டவரைக் கைது செய்து நாடு கடத்தும் அமெரிக்காவின் குடியேற்றக் கொள்கைகளுக்கு எதிராக, லாஸ் ஏஞ்சல்ஸில் தொடங்கிய ஆர்ப்பாட்டங்கள் தற்போது அந்நாடு முழுவதும் பரவி தீவிரமடைந்துள்ளன.

அங்கு இராணுவ ஆதரவுடன் அடக்குமுறை தொடங்கியதோடு, இன்னும் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அதிபர் டோனல் டிரம்ப் எச்சரித்தும் போராட்ட அலைகள் ஓயவில்லை. 

கடந்த வெள்ளிக்கிழமை போராட்டங்கள் தொடங்கிய லாஸ் ஏஞ்சலஸ் நகரில், நேற்றிரவு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தபோதும் போலீசார் 25 பேரைக் கைது செய்திருக்கின்றனர். 

அரசாங்க கட்டிடங்களைச் சுற்றியுள்ள பகுதியில் ஆயுதம் ஏந்திய பாதுகாப்பு அதிகாரிகள் முழுமையாகப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அதேவேளையில், பொதுச் சொத்துகளைச் சேதப்படுத்துதல் மற்றும் கொள்ளைச் சம்பவங்களைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வர்த்தகர்கள் தங்களின் கடைகளையும் மூடியுள்ளனர். 

ஆர்ப்பாட்டங்களைக் கட்டுப்படுத்த போலீஸ் உறுப்பினர்களுடன் சேர்த்து அமெரிக்க கடற்படை உறுப்பினர்களின் எண்ணிக்கை 4,000-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அந்நாட்டில் ஆவணமற்ற குடியேறிகளின் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகளால் அரசாங்கத்திற்கு எதிரான அமைதி போராட்டங்கள் அதிகரித்தன.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)