கோலாலம்பூர், 12 ஜூன் (பெர்னாமா) -- கொவிட்-19 நோயின் புதிய உருமாறிய தொற்றான ஜே.என். 1 (JN.1) குறித்து பொதுமக்கள் பதற்றமடைய வேண்டாம்.
இப்புதிய உருமாறிய தொற்று பழைய தொற்றுகளை விட ஆபத்தானதன்று என்று சுகாதார அமைச்சு இன்று தெரிவித்துள்ளது.
அண்மையில், கொவிட்-19 நோய்ச் சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு வந்தாலும், சராசரி வாராந்திர தொற்று எண்ணிக்கை தேசிய எச்சரிக்கை அளவை விடக் குறைவாகவே பதிவாகுவதாகவும் இதுவரை மரணம் எதுவும் பதிவாகவில்லை என்றும் இன்று வெளியிட்ட அறிக்கையில் அவ்வமைச்சு கூறியது.
கொவிட்-19 பெருந்தொற்றுடன் வாழ வேண்டும் என்பதற்கு ஏற்பவே இச்சூழல் உள்ளதாகவும் அது குறிப்பிட்டது.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]