| BREAKING NEWS | Warga ATM terlibat aktiviti tidak bermoral, rosakkan imej ATM akan disingkir daripada perkhidmatan - Mohamed Khaled | |
அம்பாங், 10 ஜனவரி (பெர்னாமா) -- தேசிய மிருகக்காட்சி சாலை, குறிப்பாக பாண்டா கரடிகள் பராமரிப்பு மற்றும் கண்காட்சி மையத்தின் மேம்பாட்டுத் திட்டத்திற்காக சுமார் 50 லட்சம் ரிங்கிட் கூடுதல் ஒதுக்கீட்டை, பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று அறிவித்தார்.
சுற்றுப்பயணிகளை வெகுவாக ஈர்க்கும் அத்தளத்திற்குக் கூடுதல் வசதிகளை வழங்கும் நோக்கில், கடந்தாண்டு 50 லட்சம் ரிங்கிட் ஒதுக்கீடு செய்யப்பட்டதாக அன்வார் கூறினார்.
“நான் அங்கு சென்றபோது, தேசிய மிருகக்காட்சி சாலைக்குக் கூடுதல் வசதிகள் மற்றும் உபகரணங்களை வழங்குவதற்காக கடந்தாண்டு 50 லட்சம் ரிங்கி ஒதுக்கீட்டை அறிவித்தேன். ஏனென்றால், அவர்களின் செயல்திறன் பாராட்டுக்குரியது மற்றும் சுற்றுலா தளமாகவும் உள்ளது. அதோடு, பள்ளி மாணவர்களின் வருகையின் போது அவர்களுக்கு அச்சுற்றுச்சூழல் உகந்ததாக இருக்க வேண்டும்,'' என்றார் அவர்.
மலேசியா - சீனா இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்தும் அடையாளமாக சென் சிங் மற்றும் சௌ யூ எனும் இந்த பாண்டா கரடிகளின் வருகை அமைந்துள்ளது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)