Ad Banner
Ad Banner
Ad Banner
 உலகம்

பேங்காக்கில் பேருந்துடன் சரக்கு ரயில் மோதல்; எண்மர் பலி

17/05/2026 02:23 PM

பேங்காக், 17 மே (பெர்னாமா) --  தாய்லாந்து, பேங்காக்கில் உள்ள மக்காசன் விமான நிலைய ரயில் இணைப்பிற்கு அருகே, சரக்கு ரயில் ஒன்று பேருந்துடன் மோதிய சம்பவத்தில் எண்மர் உயிரிழந்த நிலையில், குறைந்தது 15 பேர் காயமடைந்தனர்.

மதியம் சுமார் 3 மணிக்கு நிகழ்ந்த இச்சம்பவத்தில் பேருந்து பயணிகளே அதிகம் பாதிக்கப்பட்டதாக, தாய்லாந்து போலீஸ் துறை துணை ஆணையரும், அதன் துணை செய்தி தொடர்பாளருமான மேஜர் ஜெனரல் தீரதேஜ் தம்சுதீர் கூறினார்.

சிவப்பு சமிக்ஞை விளக்கிற்காக காத்திருந்த போது கடும் போக்குவரத்து நெரிசலில் அப்பேருந்து விபத்தின் போது ரயில் தண்டவாள பாதையில் நின்று கொண்டிருந்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக தீரதேஜ் தம்சுதீர் தெரிவித்தார்.

போக்குவரத்து நெரிசலின் காரணமாக தண்டவாளத்திலிருந்து நகர்வதற்குப் பேருந்திற்கு இடம் கிடைக்கவில்லை என்று அவர் கூறினார்.

இச்சம்பவம் குறித்த தொடர் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

சம்பந்தப்பட்ட ரயில் கனமாக சுமைகளை ஏற்றிக் கொண்டு வந்த ஒரு கொள்கலன் சரக்கு ரயில் என்பதால் பேருந்துடன் மோதுவதற்கு முன்னதாக ஓட்டுநரால் அதனை கட்டுப்படுத்த முடியவில்லை என்று தாய்லாந்தின் போக்குவரத்து துணை அமைச்சர் சிரிபொங் அங்காசாகுல்கியாட் கூறினார்.

இதனிடையே, விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உடனடி சிகிச்சை வழங்குவதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆதரவளிப்பது, மருத்துவ சிகிச்சைக்கான வசதிகளைச் செய்து தருவதும் உறுதி செய்யப்படும் என்றார் அவர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)