உத்தரப் பிரதேசம், 03 ஜூலை (பெர்னாமா) -- இந்தியா, உத்தரப் பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற மத சொற்பொழிவு நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி நூற்றுக்கும் அதிகமனோர் உயிரிழந்தனர்.
பலர் படுகாயமடைந்தனர்.
உயிரிழந்தவர்களில் பலர் பெண்கள் மற்றும் சிறுவர்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
உத்தரப் பிரதேச மாநிலத்தின் ஹத்ராஸ் எனும் மாவட்டத்தில் இத்துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
வெப்பம் மற்றும் மூச்சுத் திணறல் காரணமாக கூராத்தில் கூடியிருந்த மக்கள் வெளியே செல்ல முற்பட்ட போது இக்கூட்ட நெரிசல் ஏற்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சுமார் 5,000 பேர் மட்டுமே கலந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்ட நிலையில், இந்நிகழ்ச்சியில் 15,000க்கும் அதிகமான மக்கள் கூடியிருந்ததாக முதற்கட்ட போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மோசமான உள்கட்டமைப்பு மற்றும் போதிய பாதுகாப்பு நடவடிக்கைகள் இல்லாததால், இந்தியாவில் நடைபெறும் மக்கள் கூட்டங்களில் நெரிசல் ஏற்படுவது இயல்பானவை.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ) 502