உலகம்

சில மாதக் கொண்டாட்டங்களுக்குப் பிறகு நேற்று நிறைவடைந்தது அம்பானி குடும்ப திருமண வைபவம்

15/07/2024 06:44 PM

மும்பை, 15 ஜூலை (பெர்னாமா) -- ஆசியாவின் மிகப்பெரிய செல்வந்தரான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி, தொழிலதிபர் வீரென் மெர்சன்ட்டின் மகள் ராதிகா மெரிசன்ட்டின் திருமண வைபவம், சில மாத கொண்டாட்டங்களுக்குப் பின்னர் நேற்று திருமண வரவேற்பு நிகழ்ச்சியுடன் நிறைவடைந்தது.

இந்தத் திருமணத்தில் உலக தலைவர்கள், உலக அளவிலான பிரபலங்கள், இந்திய அரசியல் கட்சிகளின் தலைவர்கள், திரைப்படக் கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள், தொழில் அதிபர்கள் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.

மூன்று நாட்கள் கொண்டாட்டமாக வெள்ளிக்கிழமை தொடங்கிய திருமண வைபவ சடங்குகளுக்குப் பின்னர், சனிக்கிழமை திருமணம் நிறைவடைந்து.

இந்த மூன்று நாட்கள் கொண்டாட்டத்தில் பிரிட்டிஷ் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜோன்சன், டோனி ப்ளேர் உட்பட இந்தி திரைப்பட நடிகர்களான அமிதாப் பச்சன், ஷாருக் கான், சல்மான் கான் ஆகியோர் என ஆயிரக் கணக்கானோர் கலந்து கொண்டனர்.

திருமண சடங்கைத் தொடர்ந்து சனிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வரவேற்பு நிகழ்ச்சியில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் கலந்து கொண்டார்.

இத்திருமண வைபவத்தை முன்னிட்டு, கடந்து சில மாதங்களாகவே ஏற்பாடு செய்யப்பட்டு வந்த நிகழ்ச்சிகள் உட்பட நேற்றைய திருமண வரவேற்பு நிகழ்ச்சி வரை செலவான மொத்த தொகை குறித்தி அம்பானி தெரிவிக்கவில்லை.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)