அரசியல்

அறுவரின் நாடாளுமன்றத் தொகுதிகள் காலி செய்யப்படாது - பெர்சத்துவுக்கு மக்களவைத் தலைவர் கடிதம்

10/07/2024 06:11 PM

கோலாலம்பூர், 10 ஜூலை (பெர்னாமா) -- பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமை ஆதரித்த பெர்சத்து கட்சியைச் சேர்ந்த ஆறு முன்னாள் உறுப்பினர்களின் தொகுதிகள் காலி செய்யப்படாது என்று மக்களவைத் தலைவர் டான் ஶ்ரீ ஜொஹாரி அப்துலிடமிருந்து அக்கட்சிக்கு கடிதம் கிடைத்துள்ளது

9-ஆம் தேதி கொண்ட அக்கடிதம் நேற்று மாலையில் தமது தரப்பிற்கு கிடைத்ததாக பெர்சத்து கட்சியின் தலைவர் டான் ஶ்ரீ முகிடின் யாசின் தெரிவித்தார்.

இன்று மாலை நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் டான் ஶ்ரீ முகிடின் அத்தகவல்களை வழங்கினார்.

இவ்விவகாரம் குறித்து பெர்சத்து தகுந்த நடவடிக்கை எடுக்க, சட்ட நிபுணரை நியமிக்க விருப்பதாகவும் முகிடின் கூறினார்.

-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)