பொது

புகைப் பிடிக்கும் பொருட்களின் கட்டுப்பாட்டுச் சட்டம் அக்டோபரில் நடைமுறைப்படுத்தப்படலாம்

17/08/2024 06:21 PM

செர்டாங், 17 ஆகஸ்ட் (பெர்னாமா) -- 2024-ஆம் ஆண்டுக்கான பொது சுகாதாரத்திற்கான புகைப் பிடிக்கும் பொருட்களின் கட்டுப்பாட்டுச் சட்டம் இவ்வாண்டு அக்டோபர் மாதத்தில் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

அது தொடர்பிலான அனைத்து விதிகளும் நிபந்தனைகளும் தேசிய சட்டத்துறைத் தலைவரின் அலுவலகத்தால் அங்கீகரிக்கப்பட்டு தற்போது சுகாதார அமைச்சு அதை மீண்டும் பெறுவதற்காக காத்திருப்பதாக சுகாதார அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் சுல்கெஃப்லி அஹ்மாட் தெரிவித்தார்.

2024-ஆம் ஆண்டுக்கான தேசிய அளவிலான உலக இரத்த சோகை விழிப்புணர்வு தினத்தை இன்று சிலாங்கூர், செர்டாங்கிலுள்ள புத்ரா பல்கலைக்கழகத்தின் சுல்தான் அப்துல் அசிஸ் ஷா மருத்துவமனையில் தொடக்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் அவ்வாறு கூறினார்.

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]