பொது

உயர் நிலையில் உள்ள மலேசியா -  புரூணை உறவு

18/08/2024 05:14 PM

புத்ராஜெயா,18 ஆகஸ்ட் (பெர்னாமா) -- மலேசியாவிற்கும் புரூணைக்கும் இடையிலான உறவு தற்போது உயர் நிலையில் உள்ளது.

புரூணையின் பட்டத்து இளவரசர் Pengiran Muda Mahkota Al-Muhtadee Billah Sultan Hassanal Bolkiah-இன் மலேசியாவிற்கான அதிகாரப்பூர்வப் பயணம் புரூணை தலைமைத்துவம் முழுவதிலும் இருவழி உறவை மேம்படுத்த உறுதி கொண்டுள்ளதைக் காட்டுவதாக பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

இன்று, புத்ராஜெயாவில், புரூணை பட்டத்து இளவரசரின் மரியாதை நிமித்தப் பயணத்தை முன்னிட்டு மதிய உணவு உபசரிப்பில் கலந்து கொண்டப் பின்னர் டத்தோ ஶ்ரீ அன்வார் அவ்வாறு குறிப்பிட்டார்.

இச்சந்திப்பின்போது, புரூணையில் மலேசிய மக்களுக்கான வாய்ப்பு உட்பட மலேசியாவில் புரூணை மக்களுக்கான வாய்ப்பு குறித்து கலந்துரையாடப்பட்டதாக அவர் மேலும் கூறினார். 

புரூணை பிரதமர் துறை அலுவலகத்தின் மூத்த அமைச்சருமான Pengiran Muda Mahkota Al-Muhtadee Billah, இன்று காலை 11.25 மணிக்கு புத்ராஜெயாவின் ஶ்ரீ பெர்டானா வளாகத்தை வந்தடைந்தார்.

அவரும், அவரின் பேராளர் குழுவும், ஆகஸ்ட் 17 தொடங்கி 21ஆம் தேதி வரை மலேசியாவிற்கு ஐந்து நாட்கள் அதிகாரப்பூர்வப் பயணம் மேற்கொண்டுள்ளன

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)