பாங்காக், 20 ஆகஸ்ட் (பெர்னாமா) -- தாய்லாந்தின் புதிய அமைச்சரவை இவ்வாரம் அறிவிக்கப்படும்.
கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதால் புதிய அமைச்சரவை தொடர்பான இறுதி முடிவு கூடிய விரைவில் மேற்கொள்ளப்படும் என்று பிரதமர் பெட்டொங்டர்ன் ஷினாவத்ரா தெரிவித்திருக்கிறார்.
அண்மையில் பதவி நீக்கம் செய்யப்பட்ட அந்நாட்டின் முன்னாள் பிரதமர் சிரேட்டா தவிசின் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த அனைத்து அமைச்சர்களும் இப்புதிய அமைச்சரவையில் இடம்பெற்றிருக்க வாய்ப்பு குறைவாக இருப்பதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்திருக்கின்றனர்.
தற்போது கூட்டணியில் பலம் பெற்றிருக்கும் ஃப்யூ தாய் கட்சி, அமைச்சர் பதவிகளுக்கான தனது வேட்பாளர்களை முன்மொழிந்திருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும் இதர கூட்டணி கட்சிகளுடன் பெட்டொங்டர்ன் ஷினாவத்ரா இன்று பேச்சுவார்த்தையை மேற்கொள்ளவிருப்பதாக நம்பப்படுகிறது.
-- பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]