உலகம்

பாகிஸ்தான் யாத்ரீகர்கள் பயணித்த பேருந்து விபத்துக்குள்ளானதில் 35 பேர் பலி

21/08/2024 05:21 PM

யாஸ்த் மாகாணம், 21 ஆகஸ்ட் (பெர்னாமா) -- பாகிஸ்தானில் இருந்து ஈராக்கிற்கு யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற பேருந்து மத்திய ஈரானில் விபத்துக்குள்ளானது.

இதில் குறைந்தது 35 பேர் உயிரிழந்த வேளையில், 18 பேர் காயமடைந்தனர்.

மத்திய ஈரானிய மாகாணமான யாஸ்ட்டில் செவ்வாய்கிழமை இரவு இவ்விபத்து நிகழ்ந்ததாக பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அப்பேருந்து, கவிழ்ந்ததாகவும் நம்பப்படுகிறது.

ஈரானிய தலைநகர் தெஹ்ரானில் இருந்து சுமார் 500 கிலோமீட்டர் தொலைவில் தென்கிழக்கு பகுதியில் உள்ள TAFF நகருக்கு வெளியே இப்விபத்து நிகழ்ந்தபோது பேருந்தில் 50-க்கும் மேற்பட்டோர் பயணித்தனர்.

விபத்துக்குள்ளாகி தலைகீழாக கிடந்த அப்பேருந்தின் கூரைகள் உடைக்கப்பட்டு கதவுகள் அனைத்தும் திறக்கப்பட்டிருந்த படங்களை ஈரானிய அரசாங்க தொலைக்காட்சி ஒளிபரப்பியது,

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)