உலகம்

சீனா, லியாவ்னிங்கில் வெள்ளத்துடன் கூடிய நிலச்சரிவு; 300 பேர் பரிதவிப்பு

21/08/2024 05:36 PM

லியாவ்னிங், 21 ஆகஸ்ட் (பெர்னாமா) -- சீனா, வடகிழக்கு மாகாணமான லியாவ்னிங்கில் உள்ள கிராமப் பகுதிகளில் பெய்த கனமழையினால் அங்கு வெள்ளமும் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது.

இதில் 300-க்கும் மேற்பட்டோர் சிக்கித் தவிக்கும் நிலையில், அங்கு தொடர்பும் துண்டிக்கப்பட்டுள்ளதாக சீன ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஹுலுடாஹொ நகரில் இருந்து ஏழாயிரத்திற்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்கப் பாதுகாப்பு படையினர் ஹெலிகாப்டர்களை பயன்படுத்தினர்.

பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு உதவிகள் வழங்க மாகாணம் முழுவதும் மீட்புக் குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளன.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)